Home இலங்கை “2005-2015 வன்முறைகளை, நான் மறக்கவும் இல்லை, உங்கள் கூட்டை ஏற்கவும் இல்லை”

“2005-2015 வன்முறைகளை, நான் மறக்கவும் இல்லை, உங்கள் கூட்டை ஏற்கவும் இல்லை”

by admin

2015 ஜனவரி 8 கொள்கைகளுக்கு இற்கு துரோகம் இழைக்கக்கூடாது! மைத்திரிபாலவுக்கு சந்திரிகா கடிதம்!

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கிய கொள்கைகளுக்கு துரோகம் இழைக்கக் கூடாது என்றும் அதற்கு தாம் தயாரில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடித்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் கூட்டு வைக்கும் ஜனாதிபதி மைத்திரியின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2005 முதல் 2015 வரையான பத்தாண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற வன்முறை, ஊழல் முதலிய கொடுமைகளை தான் இன்னமும் மறக்கவில்லை என்றும் அதற்காக மக்கள் அவர்களை தோற்கடித்ததையும் தான் மறக்கவில்லை என்றும் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் சந்திரிகா நினைவுபடுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More