Home இலங்கை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு –அகழ்வு தொடர்கின்றது…

மன்னார் மனித புதைகுழியில் இருந்து 300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு –அகழ்வு தொடர்கின்றது…

by admin

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர் நுழைவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (16.01.19) 130 ஆவது நாட்களை கடந்து இடம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய அகழ்வு பணிகள் குறித்து அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த அவர், மன்னார் மனித புதைகுழி அகழ்வு பனியானது இன்றுடன் 130 ஆவது தடவையாக இடம் பெற்று வருகின்றது.
இது வரை 300 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 294 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 294 மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் புளோரிடாவிற்கு அனுப்ப மன்னார் நீதி மன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி மனித எச்சங்கள் ஆய்வுக்காக புளோரிடா கொண்டு செல்லப்பட இருக்கின்றது. குறித்த ஆய்வு முடிவுகள் ஒப்படைக்கப்பட்டு இரு வாரங்களில் அறிவிக்கப்படும். அது வரை மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம் பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More