Home இலங்கை டயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ எனும் இந்திய வீடமைப்புத் திட்டம் திறப்பு விழா

டயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ எனும் இந்திய வீடமைப்புத் திட்டம் திறப்பு விழா

by admin

இந்திய அரசாங்கத்தின் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ‘ பேண்தகு யுகம் முன்னேற்றத்தின் பலம் – எங்கள் நிலத்தில் எங்கள் வீடு’ என்னும் தொனிப் பொருளோடு டயகம மேற்கு தோட்டத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

150 தனி வீடுகளைக் கொண்ட ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ புதிய கிராமம் 20 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. மேற்படி வீடுகள் 150 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 20 மில்லியன் ரூபா செலவில் மின்சாரம், மலசல கூடம் குடிநீர் மற்றும் போக்குவரத்துப் பாதை முதலான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் இடம்பெறும் திறப்பு விழா நிகழ்வு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் பங்கேற்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளிடம் கையளிப்பார்கள்.

நிகழ்வில் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம். உதயகுமார், சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, எம். ராம், சரஸ்வதி சிவகுரு, ‘ட்ரஸ்ட்’ நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்ட முகாமையாளர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More