Home இலங்கை போதைப்பொருளுக்கு எதிராக வடக்கின் 150,000 மாணவர்கள் நாளை உறுதிமொழி

போதைப்பொருளுக்கு எதிராக வடக்கின் 150,000 மாணவர்கள் நாளை உறுதிமொழி

by admin

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ‘போதையிலிருந்து விடுதலைபெற்ற நாடு’ போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்ற ‘தேசிய போதைப்பொருள் தடுப்பு – பாடசாலை வாரம்’ ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை (21) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற உள்ளது.

இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளின் சுமார் 150,000 மாணவர்கள் நாளை காலை போதைப்பொருளுக்கு எதிரான உறுதியமொழியினை மேற்கொள்ளவுள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More