Home இலங்கை புவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…

புவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…

by admin


புவியின் காவலாளி மர நடுகை திட்டத்தில் நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன கலந்துகொண்டு மரம் ஒன்றினை நாட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார். இன்று 21-01-2019 மதியம் 12 மணியளவில் யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி விவசாய, பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தின் கீழ் 1500 மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. இலங்கையை பூங்காவா மாற்றும் கனவு எனும் தொனிப்பொருளில் இம் மர நடுகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் அமைச்சர்களான றிசாட் பதியூதீன், தயாகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன் , யாழ் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் ர. விக்கினேஸ்வரன், மற்றும் விரிவுரையாளர்கள், பிரதேச செயலாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More