Home இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகப்படுத்த சிங்கப்பூர் இணக்கம்

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகப்படுத்த சிங்கப்பூர் இணக்கம்

by admin

போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் திறன் மற்றும் தொழிநுட்ப அறிவை இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அறிமுகப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இணக்கம் தெரிவித்தனர்.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதிக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தேசிய அபிவிருத்தி பிரதியமைச்சருமான டெஸ்மன் லீ (Dasmond Lee ) உள்ளிட்ட அந்நாட்டின் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (24) முற்பகல் மெண்டரின் ஓரியன்டல் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பிற்கு உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போதைப்பொருள் ஒழிப்பிற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு சிங்கப்பூர் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விசேட பிரதிநிதிகள் சிலர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More