Home இலங்கை தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மீண்டும் முயற்சிகள் ?

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மீண்டும் முயற்சிகள் ?

by admin

மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், அல்லது அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகள், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து நல்லாட்சிக்கான அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒரே கொள்கையை உடைய கட்சிகளை தேசிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள தயார் எனவும், தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உத்தேச தேசிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என குறித்த சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More