Home இந்தியா ATM இயந்திர தவறுகளுக்கு தீர்வு காண வழக்கு – ரிசர்வ் வங்கியை அணுக  உத்தரவு..

ATM இயந்திர தவறுகளுக்கு தீர்வு காண வழக்கு – ரிசர்வ் வங்கியை அணுக  உத்தரவு..

by admin

தமிழகத்தின்  ஏ.டி.எம். இயந்திரங்கள் மற்றும் இணைய பண பரிமாற்றங்களில் உள்ள தவறுகளுக்கு  தீர்வு காணக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியை அணுக உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி  ஜி.எஸ்.மணி, உச்ச நீதிமன்றில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்  ATM. இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது சில நேரங்களில் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வருவது இல்லை. ஆனால் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட தொகை கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. இந்த தொகை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் உடனே வரவு வைக்கப்படுவது இல்லை. சில நாட்கள் தாமதம் ஆகிறது.

சில நேரங்களில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதே பிரச்சினை இணைய மூலமான வங்கி பண பரிமாற்றங்களிலும் நிகழ்கிறது.

இந்த பிரச்சினைகளால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை தற்போது விசாரணைக்கு ஏற்க முடியாது. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் மனுதாரர் இந்த பிரச்சினை குறித்து ரிசர்வ் வங்கியை அணுகி மனு அளிக்கலாம். ரிசர்வ் வங்கி அந்த மனுவை 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவை எடுக்கவில்லை என்றால் மனுதாரர் உரிய அமைப்பை அணுகி முறையிடலாம். என உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More