இலங்கை பிரதான செய்திகள்

வல்வெட்டித்துறையில் கஞ்சா மூவர் கைது…

வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என்று காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

“சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா போதைப்பொருளை வேறு இடத்துக்கு கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் பின்னரே மேலதிக விவரம் தெரியவரும்” என்றும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.