Home இலங்கை மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் கையளிக்கப்பட்டன..

மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் கையளிக்கப்பட்டன..

by admin

மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட சில மனித எச்சங்களில் காபன் பரிசோதனை செய்வதற்கு அடையாளப்படுத்தப்பட்ட 6 மனித எச்சங்கள் அடங்கிய பொதிகள் மன்னார் நீதவான் நீதி மன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக கடந்த புதன் கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் நேற்று காபன் பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித எச்சங்கள் B/295 எனும் இலக்கமிடப்ப்பட்டு  ஆய்வகத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கையளிக்கும் நிகழ்வில் காணமல் போனோர் அலுவலக ஆணையாளர் மிராக் ரஹீம்  ,காணமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் விஸ்.நிரங்சன் மற்றும் திருமதி ரங்சிதா ஆகியோர் உடன் இருந்தமை குறிப்பிட தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More