Home சினிமா புனே சர்வதேச திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

புனே சர்வதேச திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

by admin

 

இயக்குனர் வஸந்த் எழுதி இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வேளையில் ரசிகர்கள் மற்றும் திரைப்படைப்பாளிகளிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இயக்குனர் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்று வருகின்றது. இந்த படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்தவாரம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். முன்னதாக மும்பை திரைப்பட விழா, 23ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழா, ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவிலும் தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டபோதும் பாராட்டைப் பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். குறிப்பாக, பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் இத் திரைப்படம் பாராட்டு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை வைத்து திரைக்கதையாக்கி, இயக்குனர் வஸந்த் இந்தத் திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More