Home இலங்கை “தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை மீட்கவே போராடினேன் ஆதரவு தாருங்கள்”

“தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை மீட்கவே போராடினேன் ஆதரவு தாருங்கள்”

by admin

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ,  ஊடக செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் அமெரிக்க குடியுரிமை நீக்கப்படும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் தனது முடிவுக்கு மகிந்த ராஜபக்ஸவின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்துள்ளதாக தெரிவித்த கோத்தாபய ராஜபக்ஸ தற்போதைய ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவற்றை நம்பாமல் தமிழ் மக்கள் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோருவதாகவும் அவ்வாறு ஆதரவு வழங்கும் பட்சத்தில், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு உறுதியளிப்பதாகவும் கோத்தாபய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான செயற்பாடுகள் மற்றும் நகர்வுகள் பெரும்பாலும் பூர்த்தியாகியுள்ள நிலையில் யுத்தத்திற்கு தலைமை வகித்ததால் தன்னைப்பற்றி தவறான மற்றும் பொய்யான பிரசாரங்களை தமிழ் மக்கள் மத்தியில் சிலர் முன்னெடுத்துள்ள போதிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் மீட்பதற்காகவே தான் போராடியதாகவும் கோத்தாபய தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More