Home இலங்கை மன்னார் உதவிக்கரம் அமைப்பின் 20 ஆண்டு நிறைவும் விழிப்புணர்வு பேரணியும்

மன்னார் உதவிக்கரம் அமைப்பின் 20 ஆண்டு நிறைவும் விழிப்புணர்வு பேரணியும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் கறிற்றாஸ்- வாழ்வுதயத்தின் ஒரு பிரிவாகிய உதவிக்கரப் பிரிவு உதயமாகி 20 ஆண்டுகள் நிறைவையொட்டி விசேட நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(31) காலை கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை செ. அன்ரன் அடிகளாரின் தலைமையில் உதவிக்கர நிலையத்தில் இடம் பெற்றது.

1999 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உதவிக்கரம் அமைப்பு யுத்தம் காரணமாகவும் இயற்கை உபாதை, பிறவி குறைபாடு மற்றும் விபத்தினால்; அங்கங்களையும் உள் உறுப்புக்களையும் இழந்தவர்களுக்கான உதவிகள் மற்றும் மாற்று அங்கங்களை வழங்கி மாற்று ஆற்றல் உடையவர்களுக்கான மீள் வாழ்க்கை வழங்கும் நிறுவனமாக செயற்படுகின்றது.

குறித்த அமைப்பின் 20 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 20 வருடங்களாக உதவிக்கரம் அமைப்பினால் பயன் அடைந்த பயனாளர்களை ஒன்று திரட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை பேரணி இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து உதவிகரம் அமைப்பில் சக்கர நாற்காலி மதிப்பிடல் பொறுத்துதல் பிரிவு ஆரம்ப நிகழ்வும் இடம் பெற்றது.  குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் , மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் , மன்னார் பிரதேச செயலாளர் முன்னை நாள் உதவிகர அமைப்பின் இயக்குனர்கள் உழியர்கள் மற்றும் பயனாளர்களும் கலந்து கொண்டனர்

குறித்த நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட புதிய பயனாளர்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மாற்று நிலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More