Home இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளுக்கு எற்படும் காலதாமதத்தை குறைக்க விரைவில் தீர்வு :

கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளுக்கு எற்படும் காலதாமதத்தை குறைக்க விரைவில் தீர்வு :

by admin

சர்வதேச கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம் மற்றும் அசோகரியங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட கூட்டத்தில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
‘தற்போது எமது சர்வதேச விமானநிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதும் முதன்மையானதாகவும் உள்ள பிரச்சினையானது பயணிகளது குடிவரவின் போது ஏற்படும் நெரிசல் மற்றும் காலதாமதமாகும்.

குறிப்பாக ஒரு சில சந்தர்ப்பங்களில் குடிவரவின் போது ஒரு மணித்தியாலத்தில் இரண்டாயிரம் அல்லது முன்றாயிரம் பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்குகின்றனர்.இதன்போது விமான நிலையத்தில்; நெருக்கடி மற்றும் பயணிகள் பல அசோகரியங்களை எதிர் நோக்கின்றனர். ஆகவே இதனைக் குறைப்பதற்கும் சிறந்த சேவையினை வழங்குவதற்குமான புதிய தீர்வினை நாம் முன்வைக்கவுள்ளோம். எனினும் இதற்கு நீண்டகால தீர்வொன்று மிகவும் அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் விமான நிலைய சேவையை குறுகியகால அடிப்படையிலும் நீண்ட கால அடிப்படையிலும் எவ்வாறு முன்னேற்றுவது என்பது பற்றிய ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சோடு தொடர்புடைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More