Home இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கையளிப்பு

கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கையளிப்பு

by admin

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த கடற்படை ரோந்து படகுகள் வெலிசரை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடலோர ரோந்து படகுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் சர்வதேச நியமங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படை தொழிநுட்பத்தை பயன்படுத்தி கடற்படை பொறியியலாளர்களின் மேற்பார்வையின் கீழ் ஆறு வாரகால குறுகிய காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது போன்ற மற்றுமொரு படகையும் இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு சீஷெல்ஸ் அரசாங்கம் இலங்கை கடற்படையிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த படகுகளை கையளிக்கும் நிகழ்வுக்கு சீஷெல்ஸ் நாட்டின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன் இலங்கைக்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதியினால் படகுகளை கையளிப்பதற்கான ஆவணங்கள் அவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More