Home உலகம் எலிசபத் ராணி – குடும்பத்தாரை லண்டனில் இருந்து வெளியேற்ற ரகசிய திட்டம் :

எலிசபத் ராணி – குடும்பத்தாரை லண்டனில் இருந்து வெளியேற்ற ரகசிய திட்டம் :

by admin

பிரெக்சிற்  முடிவு தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத் மற்றும் அவரது குடும்பத்தாரை லண்டனில் இருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகமானோர் வாக்களித்ததனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

வலகுவதற்கான காலக்கெடுவான மார்ச் 29ம் நெருங்கி வருவதால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்திற்கு சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ; எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த எதிர்ப்பு போராட்டமாக உருவெடுக்கலாம் என கருதப்படுகின்ற நிலையில் அவ்வாறு ஒரு போராட்டம் இடம்பெற்றால் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வாழ்ந்துவரும் ராணி இரண்டாம் எலிசபத் மற்றும் அவரது குடும்பத்தாரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய பனிப்போர் காலத்திலும், பிரித்தானியா மீது சோவியத் யூனியன் அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்பட்ட வேளையிலும் பிரித்தானிய அரசக் குடும்பத்தினர் இதுபோல் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டு, லண்டன் நகருக்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்ட வரலாறையும் அந்த செய்தி சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More