Home இலங்கை யாழ் பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி

யாழ் பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலங்கையின் சுதந்திரதினமான இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது. அத்தோடு பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டுசுதந்திர தின நிகழ்வுகள்நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.

ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் கரிநாளாகப் பிரகடனம் படுத்தி கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்திய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கரிநாள் பதாகைகளையும் எமக்கு எப்போது சுதந்திர தினம் எனக் குறிப்பிட்டுள்ள கறுப்பு கொடிகளையும் பல்கலைக்கழகத்தைச் சூழ பறக்கவிடப்பட்டுள்ளனர்.

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More