Home இலங்கை சந்­தே­க­ந­பர்­கள் கையில் ஆயு­தம் வைத்­தி­ருந்­த­தைக் காண­வில்லை…

சந்­தே­க­ந­பர்­கள் கையில் ஆயு­தம் வைத்­தி­ருந்­த­தைக் காண­வில்லை…

by admin

யாழ்ப்­பா­ணம் நல்­லூர் ஆடி­ய­பா­தம் வீதி­யில் மரக்­கா­லை­யில் வேலை செய்­யும் நபரைத் தாக்க முற்­பட்­டார் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் சந்­தே­க­ந­பர்­கள் கையில் ஆயுதம்  வைத்­தி­ருந்­த­தைக் காண­வில்லை என்று சாட்சி ஒரு­வர் யாழ்ப்­பாணம் நீதி­வான் மன்­றில் நேற்­றுச் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

ஆடி­ய­பா­தம் வீதி­யில் உள்ள மரக்­காலையில் வேலை செய்­யும் இளை­ஞனை இனந்­தெ­ரி­யாத கும்­பல் தாக்க முற்­பட்­ட போது, இளை­ஞன் அவர்­க­ளி­ட­மி­ருந்து தப்பி ஓடி­ய­போது கிணற்­றில் வீழ்ந்­துள்­ளார். பின்­னர் ஊர­வர்­க­ளால் காப்­பாற்­றப்­பட்­டி­ருந்­தார். இந்­தச் சம்­ப­வம் கடந்த செப்­ரெம்­பர் மாதம் இடம்­பெற்­றி­ருந்­தது. தாக்க முற்பட்டனர் என்ற சந்­தே­கத்­தில் 4 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து கத்தி போன்ற ஆயு­தம் ஒன்றை மீட்­டி­ருந்­ததாக  குற்­றஞ்­சாட்­டி கோப்­பாய் காவற்துறையினர்  வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.

யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் நீதி­வான் ஏ.எஸ்.பி.போல் முன்­னி­லை­யில் வழக்கு விசா­ரணை நேற்று நடை­பெற்­றது. அங்கு சாட்சியமளித்த முறைப்­பாட்­டா­ளர், ஆடியபாதம் – நல்­லூர் வீதி­யில் உள்ள மரக்­கா­லை­யில் நின்­றி­ருந்த போது சில நபர்­கள் தன்­னைத் தாக்­கு­வது போல வந்­ததாகவும், தான் தப்பி ஓடும்­போது அயல் வீடு ஒன்­றின் மதில்­மேல் ஏறிப் பாய்ந்தே ஓடியபோது, எதிர்­பா­ராத வித­மாக மரக்­கா­லைக்கு அரு­கில் இருந்த கிணற்­றுக்­குள் தவறி வீழ்ந்­ததாகவும் தெரிவித்துள்ளார். காப்பாற்றுமாறு கூக்­கு­ர­ லிட்­டபோது,  முத­லா­வது சந்­தே­க­ந­பர் தான் வீழ்ந்து கிடந்­த­மையை எட்­டிப்­பார்த்­தார். பின்­னர் அங்கு ஒன்று கூடிய ஊர்­மக்­கள் தன்­னைக் கிணற்­றி­லி­ருந்து மீட்­ட­னர். மீட்­கும்­போது ஊர்­மக்­க­ளு­டன் காவற்துறையினரும்  நின்­றி­ருந்­த­தாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னை விரட்­டி­ய­வர்­களே கிணற்­றுக்­குள் வீழ்ந்­த­தும் எட்­டிப்­பார்த்­த­னர் என் தான் நினைத்­ததாகவும் சாட்­சி­யம் அளித்­தார்.சந்­தேக நபர்­கள் சார்பில் குறு க்கு விசா­ரணை நடத்­திய சட்­டத்­த­ரணி மு.ரெமீ­டி­யஸ், “மரக்­கா­லைக்­கும் கிணற்­றுக் கும் இடை­யில் எவ்­வ­ளவு தூரம்?. வந்­த­வர்­களை நீங்­கள் அடை­யா­ளம் கண்­டீர்­களா?. கிணற்­றில் இருந்து மீட்­கப்­ப ட்­ட­தும் அவர்­களை கண்­டீர்­களா?. காவற்துறையினர் உங்­களை எப்­படி அழைத்­துச் சென்­ற­னர்?. அழைத்­துச் செல்­லும்­போது சந்­தே­க­ந­பர்­கள் ஆயு­தம் ஏதா­வது வைத்­தி­ருந்­த­னரா? “ என்று கேட்­டார்.அதற்­குச் சாட்­சி­ய­ம­ளித்த அவர்: “மரக்­கா­லைக்­கும் கிணற்­று க்­கும் இடையே 100 மீற்­றர் தூரம். என்னை கலைத்தவர்களை நான் சரி­யாக அப்­போது பார்க்­க­வில்லை. கிணற்­றுக்­குள் வீழ்ந்­த­போது முத­லா­வது சந்­தேக நபர் மட்­டுமே என்னை எட்­டிப்­பார்த்­தார். நான் கிணற்­றில் இருந்து மீட்­கப்­பட்­ட­போது முத­லா­வது சந்­தேக நபர் உட்­பட ஏனைய நபர்­களை நான் சம்­பவ இடத்­தில் காண­வில்லை.  என்­னைப் பொறுப்­பேற்ற காவற்துறையினர், சில­மணி நேரத்­தி­லேயே தமது வாக­னத்­தில் ஏற்றி காவல் நிலை­யம் அழைத்துச் சென்­ற­னர். கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளைப் காவல்  நிலை­யத்­தில் கண்­டேன். அவர்­களை இந்த வழக்­குக்கு முன்­னர் பார்த்­த­தும் இல்லை, பழக்­க­மும் இல்லை. எனது நண்­பர்­க­ளுக்­கும் இன்­னொரு தரப்­பி­ன­ருக்­கும் அன்யைய தினம் நல்­லூர் பகுதியில் முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது. நான் நண்­பர்­க­ளு­டன் நின்­ற­போ­தும் முரண்­பாடு நடை­பெ­றும்­போது நான் அங்கு இருக்­க­வில்லை. அந்த முரண்­பாட்டை நான் அறிந்­த­மை­யால்­தான் என்­னைத் தாக்க வரு­கின்­ற­னரோ என்ற அச்­சத்­தில் மதில் பாய்ந்து ஓடி­னேன்.” -என்று சாட்­சி­ய­ம­ளித்­தார். வழக்கு தொடர் சாட்­சி­யத்­துக்­காக எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More