இலங்கை பிரதான செய்திகள்

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்டங்களுக்கு தடை….

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேளிக்கை விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கும் பிரேரணை யாழ்ப்பாண மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் நடைபெற்றபோது மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்தல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேளிக்கை விழாக்களை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

முக்கியமாக தமிழ் இன அழிப்பு நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தியாக தீபன் திலீபனின் ஆரம்ப இறுதி நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தில் இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளுக்கு மாநகர சபை அனுமதி வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார்;

அதனைத் தொடர்ந்து அப்பிரேரணை மீது சபையில் விவாதம் நடத்தப்பட்டபோது, ஈ.பி.டி.பியின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ரெமிடியஸ் முதல் போராளியான சிவகுமாரன் உயிரிநீத்த ஜூன் 5ஆம் திகதியிலும் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுதிருந்தார்.

இதனையடுத்து குறித்த பிரேரணை நிறைவில் மாவீரர் வாரம் முழுவதுமான நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என்ற போதிலும் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் கேளிக்கை நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கலாம் என மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் தெரிவித்துள்ளதனையடுத்து பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.