Home இலங்கை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் 15ம் திகதி இலங்கை வருகின்றனர்

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் 15ம் திகதி இலங்கை வருகின்றனர்

by admin

கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலின் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர். கடந்த ஒக்டோபர் 26ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக நாணய நிதியம் வழங்கவிருந்த ஆயிரத்து 500 மில்லியன் டொலர் நிதியின் ஐந்தாவது தவணை கைவிடப்பட்டிருந்தது.

ஆறு தவணைகளாக வழங்கப்படவிருந்த கடன் தொகையில் நான்கு தவணைகளுக்கான 760 மில்லியன் டொலர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தவணைக்குரிய நிதியை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த ஒக்டோபர் மாதம் 29ம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும் நாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசாங்கம் ஒன்று இல்லாமை காரணமாக அந்த கலந்துரையாடல் இடம்பெறாதநிலையில் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 15ம் திகதி இலங்கை வரவுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More