Home இலங்கை முதல்தடவையாக வட மாகாண ஆளுனர் மன்னாருக்கு சென்றுள்ளார் – ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

முதல்தடவையாக வட மாகாண ஆளுனர் மன்னாருக்கு சென்றுள்ளார் – ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண ஆளுனராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் மன்னார் மாவட்டத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை முதல்தடவையாக சென்று கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலின் போது செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்டபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகள் ,மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் ; மேற்கொள்ளப்பட்டது.
உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், மன்னார் ,நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகியவற்றின் பிரதேசச் செயலாளர்கள், மாவட்டத்தில் உள்ள கிராம அலுவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் வருகை தருவதாக இருந்த போதும்,நீண்ட நேரத்தின் பின்னரே அவரது வருகை அமைந்திருந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமானது.

இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களும் அங்கே சமூகமளித்திருந்தனர்.அரசாங்க அதிபரின் ஆரம்ப உரை இடம் பெற்ற போது ஆளுனருடன் வருகை தந்த பிரத்தியேக செயலாளர் என கூறப்படுபவரினால் ஊடகவியலாளர்களை மண்டபத்தில் இருந்து வெளியில் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் குறித்த செயலாளர் ஆளுனரின் பாதுகாப்பு பிரிவினரை வைத்து ஊடகவியலாளர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை டேற்கொண்டார்.

இதனால் ஊடகவியலளார்கள் அங்கிருந்து வெளியேறினர்.வடமாகாண ஆளுனராக முன்னர் இருந்த ரெஜீனோல்ட் குரோயின் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த சுதந்திரம் தமிழராக தற்போது ஆளுனராக நியமிக்கப்பட்டவரின் காலத்தில் இல்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More