Home இந்தியா உத்தரகாண்ட் மாநில, கள்ளச்சாராய மரணங்கள் – சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது…

உத்தரகாண்ட் மாநில, கள்ளச்சாராய மரணங்கள் – சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது…

by admin

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் காரணமாக சுமார் 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 8-ம் திகதி கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதில் 12 பேர உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.  பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More