Home சினிமா 300 கோடியில் உருவாகும் விக்ரமின் புதிய திரைப்படம் மகாவீர கர்ணா

300 கோடியில் உருவாகும் விக்ரமின் புதிய திரைப்படம் மகாவீர கர்ணா

by admin


ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகாவீர் கர்ணா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத் திரைப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது, ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் விக்ரம் தற்போது மகாவீர் கர்ணா படத்தில் இணைந்துள்ளார்.

விக்ரமை கதாநாயகனாக கொண்டு தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் மகாவீர் கர்ணா திரைப்படத்தைமலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் செலவில் பாரிய திரைப்படமாக இயக்குகிறார்.

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத் ராமோஜி ஒளிப்பதிவுக் கூடத்தில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து இயக்குநர் ஆர்.எஸ்.விமல், “இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. மகாவீர் கர்ணா தொடங்கியது. சிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளே” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐதராபாத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இத் திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுளதுடன், இப்படம் 32இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More