Home பிரதான செய்திகள் அமெரிக்காவில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனை வெண்கலப் பதக்கம்

அமெரிக்காவில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனை வெண்கலப் பதக்கம்

by admin


அமெரிக்காவின் அரிசோனாவில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனையான ஹிருணி ஜயரட்ண வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளார்.

அவர் தனது இலக்கினை 14நிமிடங்கள் 19 விநாடிகளில் நிறைவு செய்துள்ளார். இலங்கையில் இது வரை அரையிறுதி மரதன் போட்டியில் பெற்ற சிறந்த இரண்டாவது சாதனையாக இது கருதப்படுகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த பிறிட்னி பவர் தங்கப்பதக்கத்தினையும் பிரித்தானியாவைச் சேர்ந்த ரோசி எட்வட்வஸ் வெள்ளி பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.

கட்டாரில் டோஹா நகரில் நடைபெறும் உலக மெய்வல்லுனர் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக பயிற்சியில் ஈ:பட்டுள்ள ஹிருணி ஜயரட்ண 2020 ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More