Home இலங்கை மன்னார் மனித புதைகுழியிலிருந்து 316 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை

மன்னார் மனித புதைகுழியிலிருந்து 316 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – கார்பன் பரிசோதனை அறிக்கை நாளை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று புதன் கிழமை (13) அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன் கிழமை 144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸஇன்று(13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று (13) புதன் கிழமை 144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.தற்போது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.

கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை நாளை 14 ஆம் திகதி எமக்கு அனுப்பி வைக்கப்படும்.குறித்த அறிக்கையானது 10 வருட காலத்தை அடிப்படையாகக் கொண்டுஅமைந்திருக்கும்.

இன்றைய தினம் அகழ்வு பணிகளின் போது சுமார் 40ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பயிற்சி பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் மனித புதைகுழி பகுதிக்கு வருகை தந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More