Home இலங்கை மன்னார் மாவட்டத்தில் குளங்கள், வயல் நி­லங்­களை ஆக்­கி­ர­மிக்­கும் வன இலாகா :

மன்னார் மாவட்டத்தில் குளங்கள், வயல் நி­லங்­களை ஆக்­கி­ர­மிக்­கும் வன இலாகா :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வனவளப்­பா­து­காப்புத் திணைக்­க­ளத்­தி­னர் மன்­னார் மாவட்­டத்­தில் விவ­சா­யக் குளங் ­க­ளை­யும் வயல்­ நி­லங்­க­ளை­யும் அடாத்­தா­கக் கைய­கப்­ப­டுத்­துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கம­நல அபி­வி­ருத்தி உதவி ஆணை­யா­ள­ரும், கம­நல கேந்­திர நிலை­யங்­க­ளும் அதைத் தட்­டிக்­கேட்­க­வில்லை எனவும் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை எனவும் தெரிவித்துள்ள நானாட்­டான் மக்கள் அதி­கா­ரி­ க­ளும், பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இதைத் தடுத்து நிறுத்த வேண்­டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள ஐந்து பிர­தேச செய­ல­கங்­க­ளில், மிகச் சிறிய பரப்­ப­ள­வைக் கொண்­டது நானாட்­டான் பிர­ தேச செய­ல­கம். அங்கு வயல்­நி­லங்­களே அதி­க­முள்­ளன. கால்­ந­டை­க­ளுக்­கான மேய்ச்­சல் தர­வை­கள் கூட இல்லை.

போர் கார­ண­மாக ஏ-14 வீதி­யால் துண்­டா­டப்­பட்டு பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­ட­தால் அந்­தக் கிரா­மத்து மக்­கள் அயல் கிரா­மங்­க­ளில் வாழ்ந்து வந்­த­னர். விவ­சாய நட­வ­டிக்­கை­கள் முற்­றாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. போர் முடிந்த பின்­னர் மக்­கள் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­ட­னர்.

அங்­குள்ள வயல் வரம்­பு­கள் அழிந்து காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. அங்­குள்ள காணி­க­ளுக்கு வன­வ­ளத் திணைக்­க­ளத்­தி­னர் எல்­லை­களை வகுத்து வரு­கின்­ற­னர். எல்­லை­கள் இடப்­ப­டு­கின்ற காணி­க­ளில் கம­நல அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­துக்­கு­ரிய சின்­னத் தேத்­தாக்­குளி, பெரிய தேத்­தாக்­குளி, வேம்­ப­டிக்­கு­ளம் என சிறு குளங்­கள் பல­வும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனால் முருங்­கன் கம­நல கேந்­தி­ர­நி­லை­யமோ அல்­லது கம­நல அபி­வி­ருத்தி உதவி ஆணை­யா­ளரோ இந்த நிலங்­களை பாது­காப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. காணி­கள் கைய­கப்­ப­டுத்­தலை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உடன் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.

அங்கு 359 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட நிலத்­தில் பயிர்ச் செய்கை இடம்­பெ­று­கி­றது. தண்­ணீர்த் தட்­டுப்­பாடு கார­ண­மாக 150 ஏக்­க­ருக்­கும் மேற்­பட்ட வயல்­கா­ணி­கள் செய்­கை­யின்றி உள்­ளன என்­றும் அங் ­குள்ள சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More