Home சினிமா ஆரியின் அடுத்த திரைப்படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

ஆரியின் அடுத்த திரைப்படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

by admin


கவிராஜ் இயக்கத்தில் ஆரி மற்றும் சாஷ்வி பாலா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம்  ராவுத்தர் அவர்களின் ‘ராவுத்தர் மூவிஸ்’. இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஆரி நடிப்பில் உருவாகி வரும் `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகின்றார். இதில் ஆரியின் நாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு பணிகளையும், கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இன்று முதல் புகைப்படம் மற்றும் சுவரொட்டியை (பர்ஸ்ட் லுக் போஸ்டர்) நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More