இலங்கை பிரதான செய்திகள்

மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தீவக வலய பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாடசாலைக்கு உரிய முறையில் முகசவரம் செய்யாது சென்றார் என பாடசாலை அதிபரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் இரண்டு நாள் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

அந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனால் காவல் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றாலே உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதிப்போம் என வலய கல்வி திணைக்கள அதிகாரிகள் மாணவனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அத்துடன் தற்போது பாடசாலையில் நடைபெற்று வரும் முன்னோடி பரீட்சையிலும் மாணவனை தோற்ற அனுமதிக்கவில்லை.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனால் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் .மாவட்ட இணைப்பாளர் ரி. கனகராஜிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.