Home இலங்கை மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கின்றது :

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கின்றது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் மனித புதை குழி அகழ்வு பணியானது 149 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை (22) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது.

தொடர்ச்சியாக ஆய்வு முடிவுகள் வெளி வரும் என எதிர் பார்க்கபட்ட போதும் குறித்த பரிசோதனையை நடாத்திய ஆய்வு நிறுவனத்தின் ஊடக நேரடியாக மன்னார் நீதி மன்றத்திற்கு எந்த முடிவுகளும் அனுப்பிவைக்கபடாத காரணத்தினால் சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட ஆவணமானது இன்னமும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை நேற்றைய தினம் குறித்த புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பாகவும் ஆகழ்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதா? என்பது தொடர்பாகவும் மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் மன்னார் நீதி மன்றத்தில் கூட்டம் ஒன்று இடம் பெற்றிருந்தது.

மன்னார் நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி ,காணாமல் போனோர் அலுவலக பிரதி நிதி ,காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் என பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் .

இதுவரை குறிப்பிட்ட வளாகத்தில் இருந்து 323 மேற்பட்ட முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 314 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More