Home இலங்கை மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் :

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களையும் எதிர் வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இ குறித்த மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை இரவு விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ள நிலையில் தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும்,அவர்கள் பயன்படுத்திய விசைப்படகினையும் கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தாழ்வுபாட்டு கடற்படையினரிடம் ஒப்படைத்ததனையடுத்து அவர்கள் இன்று மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து குறித்த மீனவர்களிடம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

இதன் போது தாங்கள் 5 பேரூம் விசைப் படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்டதாகவும்,இதன் போது தமது படகில் இயந்திரக்கோளறு ஏற்பட்ட நிலையில்,தமது படகு இலங்கை கடற்பகுதிக்கு ஒதுங்கிய நிலையிலே தாம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

வாக்கு மூலத்தை பதிவு செய்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் இன்று மாலை முன்னிலைப்படுத்திய போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா குறித்த மீனவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை (08-03-2019) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பாம்பன் பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் கொலம்பஸ்(வயது-40),நீக்கிலாஸ் அடைக்கலம் (வயது-55),பரஞ்சோதி அருள்சகாயம்(வயது-33),ஜேயபால் ஜெயகாந்(வயது-35),மூக்கையா முருகன்(வயது-42) ஆகிய 5 மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More