Home இலங்கை நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு

நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள் முழமையாக அருகில் உள்ள வடிகாலுக்குள் விடப்படுவதால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இச் சுகாதார சீர் கேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பலதடவை வலியுறுத்தியுள்ள போதும் உடன் நடவடிக்கை எடுக்க யாழ்.மாநகர சபை நிர்வாகம் மறுத்துவருவதாகவும் அவர்கள் மேலும் குறை கூறியுள்ளனர்.

யாழ்.மாநக சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வ.பார்த்திபன், எஸ்.தனுஜன் ஆகியோரினாலேயே மேற்படி குற்றச்சாட்டு முன்னவைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாணம் ஆரியகுளப் பகுதியல் உள்ள நாகவிகாரையின் விடுதியில் உள்ள மலசல கூடங்களின் மலக் கழிவுகள் அருகில் உள்ள வடிகாலுக்குள் நேரடியாக விடப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் மாநகர சபை நிர்வாகத்திற்கு பல தடவைகள் அறிவுறுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கூறியுள்ள போதும், நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.

இதனால் யாழ்.நகரப் பகுதியில் தொடர்ந்தும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடியவகையில் வெளிப்படையாக மலக் கழிவுகள் திறந்துவிடப்படுகின்றது. இதனை தடுப்பதற்கு குறித்த கடிகாலுக்குள் மலக்கழிவு வெளியேற்றுவதற்காக வரும் குழாய் நிரந்தரமாக எங்களால் அடைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More