Home இலங்கை 19ஆவது திருத்தச்சட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்

19ஆவது திருத்தச்சட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்

by admin


19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக கட்சி பேதமின்றி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தினால் சுயாதீன நிறுவனங்கள் அனைத்தும் செயலிழந்ததாக சுட்டிக்காட்யுள்ள பிரதமர் காவல்துறை, அரச சேவை என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த 19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் தேவைப்பட்டதாகவும் இதனை அடிப்படையாகக் கொண்டு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் புத்தளம் ஆனமடுவப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More