Home இலங்கை தென்னாபிரிக்காவின் மாதிரி தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றன….

தென்னாபிரிக்காவின் மாதிரி தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றன….

by admin

தென்னாபிரிக்காவின் மாதிரியை தவறாக அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள்  இலங்கையில்  இடம்பெறுவதாக தெரிவித்துள்ள ஐநாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தென்னாபிரிக்கா உண்மையை தெரிவிப்பது , விசாரணை இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட முறை என்பது பூரணமானது இல்லை எனினும் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைக்கு உகந்தது என்பதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிலைமையை இலங்கையில் இடம்பெற்ற விடயங்களுடன் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் பாரிய படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பல்வேறு கொடுமைகளை பொதுமக்கள் அனுபவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பது போன்று தென்னாபிரிக்க மக்கள் வழக்கு தாக்கல் செய்யாமலிருக்கவில்லை எனவும் கடந்த மாதம் கூட காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவரின் குடும்பத்தவர்கள் காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர் எனவும் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More