Home இலங்கை வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

by admin


வடமாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக 50க்கும் குறைந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் அரசாங்க பாடசாலைகளை மூடுவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த ஆண்டின் இறுதியில் குறித்த பாடசாலைகள் மூடப்படும் என வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் மாணவர்கள் அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு மாற்றப்படுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலைகளை பராமரிப்பதற்கு பாரியளவு செலவிடப்பட்ட போதிலும் அதற்கான கற்பித்தல் பிரதிபலன்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவ்வாறு 50 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், ஏனைய மாகாணங்களில் உள்ள இவ்வாறான பாடசாலைகளினை மூடுவது குறித்து இணங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வட மாகாண கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More