Home இலங்கை மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களுக்கு விளக்கமறியல்

மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களுக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று திங்கட்கிழமை தாம் திருகோணமலை மூதூர் நீதவான் நீதி மன்றத்தில் இருந்து மன்னார் நீதிபதியை சந்திக்க வந்துள்ளதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து மன்னார் நீதவான் ரீ.சரவணராஜவின் மெய்ப்பாதுகாவலருடன் உரையாடியுள்ளனர். இதன் போது குறித்த இருவரும் நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உரையாடியுள்ளனர்.

இதனையடுத்து மன்னார் நீதி மன்ற காவல்துறையினர் மன்னார் காவல்துறையினாருக்கு தகவல் வழங்கிய நிலையில் குறித்த நபர்களை கைது செய்து இன்று செவ்வாய்க்கிழமை(26) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தனது தீய நடத்தையின் காரணமாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More