Home இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும் :

பயங்கரவாத தடைச் சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும் :

by admin


பயங்கரவாத தடைச் சட்டத்தையும் விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும். இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எழக்கூடிய அனைத்து சக்திகளையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.  எனவே அதனை தாம் முற்றாக நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,  பயங்கரவாதம் தொடர்பில் இந்த சட்ட மூலத்தில் பல அத்தியாயங்களில் அர்த்தம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்கங்களுக்கு கூட வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்   சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More