Home இலங்கை சம்பள உயர்வு கோரி 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம்

சம்பள உயர்வு கோரி 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம்

by admin


பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி இன்று ( 03.03.2019 ) பொகவந்தலாவ நகரத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள 1000 ரூபாய் இயக்கத்தினர் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

சுமார் 100ற்கும் மேற்பட்ட பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொகவந்தலாவ நகரில் எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் ஏந்தியவாறு பொகவந்தலாவ நகரத்தில் ஊர்வலமாக சென்றனர்.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.
(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More