Home இலங்கை 11இளைஞர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டமை, கோத்தபாயவுக்கும் தெரியும்….

11இளைஞர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டமை, கோத்தபாயவுக்கும் தெரியும்….

by admin


கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரனாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளார். வசந்தகரனாகொட தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் கோத்தாபய ராஜபக்சவிற்கும் இந்த விவகாரம் குறித்து தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம் எவ்வாறு இடம்பெற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வசந்தகரனாகொட கொழும்பில் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் விவகாரத்தின் முக்கிய சூத்திரதாரி என குற்றம்சாட்டப்படும் தனது பாதுகாப்பு அதிகாரி சம்பத் முனசிங்க குறித்து தனக்கு முறைப்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2009 மே 23 ம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடம் குறிப்பிட்ட விவகாரம் குறித்து தெரிவித்ததுடன் காவல்துறை விசாரணையை கோரியதாகவும் வசந்தகரனாகொட தெரிவித்துள்ளார் எனினும் வசந்தகரனாகொடவின் செயலாளராக பணியாற்றிய சமல் பெர்ணான்டோ இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சுட்டிக்காட்டியவேளை வசந்த கரனாகொட எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். வசந்தகரனாகொட உரிய தருணத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் ஐந்துபேரின் உயிர்களையாவது காப்பாற்றியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More