இலங்கை பிரதான செய்திகள்

வவுனியாவில் பணம் கேட்டு சிறுவன் கடத்தல்


வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியினைச் சேர்ந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவனே இவ்வாறு கடப்பட்டுள்ளார்.

சிறுவன் நேற்று முன்தினம் மாலை தனது தாயாருடன் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியதன்பின் தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக செல்வதாக சென்ற போதிலும் அவர் அப்பப்பா வீடு செல்லவில்லை.

சிறுவன் செல்லும் போது அவுஸ்ரேலியாவில் உள்ள தனது கணவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த தாயார் உரையாடி முடிந்த பின் சிறுவன் சென்ற அப்பப்பா வீட்டிற்கு சென்ற போது அங்கு சிறுவன் வரவில்லை என சிறுவனின் அப்பப்பா தெரிவித்துள்ளதனையடுத்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை.

இதனையடுத்து நேற்றையதினம் காலை கனகராயன்குளம் காவல் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், சிறுவனை சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன், கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார் எனவும் மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் காவல்துறையினர்; தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.