Home உலகம் சோமாஸ் தீவு அருகே, சிரியக் குழந்தைகள் உள்ளிட்ட மூவர் கடலில் வீழ்ந்தனர்..

சோமாஸ் தீவு அருகே, சிரியக் குழந்தைகள் உள்ளிட்ட மூவர் கடலில் வீழ்ந்தனர்..

by admin

கிரீஸிற்கு சொந்தமான சோமாஸ் தீவு அருகே படகில் சென்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்த சிரிய அகதிகளின் 2 குழந்தைகள் உள்ளிட்ட மூவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை உட்பட குறைந்தது 12 பேர் படகில் இருந்ததாகவும் படகிலிருந்து தவறிவிழுந்து கடலில் மூழ்கிய இரு ஆண் குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படகிலிருந்து விழுந்து மூழ்கிய நபரும் ஒருவரும் உயிரிழந்த நிலையில் அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆரம்பித்து இரு மாதங்களில் மட்டும் மத்தியதரைக் கடலைக் கடக்க முற்படும்போது 200க்கும் அதிகமாக அகதிகளும் புலம்பெயர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் இதில் அதிகமானவர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More