Home இந்தியா பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்சியிலிருந்து நீக்கம்! 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்சியிலிருந்து நீக்கம்! 

by admin

தமிழகத்தின் பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் முகப்புத்தகம் வாயிலாக கல்லூாி, பள்ளி மாணவிகள், இளம் பெண்களை தொடா்புகொண்ட குழுவொன்று அவா்களிடம் நட்புணா்வுடன் பழகி அவா்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளமை கடந்த சில நாட்களின் முன்னர் தெரிய வந்தது. இது தொடா்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவா் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இவ் விடயம் தொடா்பாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமாா் ஆகிய நான்குபோ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து முறைப்பாடு தெரிவித்த பெண்ணை அச்சுறுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் நாகராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட நாகராஜ் அதிமுகவில் பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அவரை அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட கட்சியின் அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணைஒருங்கிணைப்பாளா் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More