Home இலங்கை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து இலங்கை பதிலளிக்கவுள்ளது….

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து இலங்கை பதிலளிக்கவுள்ளது….

by admin

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் நாளை பதிலளிக்கவுள்ளது. இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடுபற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷெலெற் அறிக்கை ஒன்றின் ஊடாக கருத்து தெரிவித்திருந்தார்  இவை தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி உயர்ஸ்தானிகர் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள விடயங்கள் பற்றி, இலங்கை பிரதிநிதிகள் நாளை விபரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வெளியுறவுச் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிற்ற ஜென்ரல் ஏநெறின்புள்ளே ஆகியோர் ஜெனீவா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைபற்றி பிரித்தானியா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் பேரவையில் தீர்மானம் சமர்ப்பித்திருந்த நிலையில் குறித்த விடயங்களை அமுலாக்குவதற்கு இரண்டு வருடகால அவகாசம் கோரும் யோசனையை எதிர்வரும் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்போவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு வெள்ளிக்கிழமை நிறைவு பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More