Home இலங்கை ஐநா மனித உரிமைகள் பேரவையில், இன்று இலங்கை தொடர்பில் அறிக்கை…

ஐநா மனித உரிமைகள் பேரவையில், இன்று இலங்கை தொடர்பில் அறிக்கை…

by admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்றையதினம் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கையில், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ அறிக்கை, இன்றைய கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, ஜெனீவா தூதரகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிக்கை, ஜெனிவா நேரப்படி இன்று பிற்பகல் 12.00 மணிக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷல் பெசல் சமர்ப்பிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவ்வறிக்கை தொடர்பில் சபையில் கருத்தாடல்கள் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தவுள்ளார். இதனையடுத்து, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது தொடர்பில் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கருத்துரைகளை வழங்குவர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் மேலும் 2 வருட கால அவகாசம் கோர வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பிரதமர் அலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து அறிக்கையொன்றை ஏற்கெனவே, வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை இணை அனுசரணை வழங்கியமை தொடர்பில் நாளையதினம் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More