Home இலங்கை சிவனொளிபாதமலை பெயர் பலகை சேதம் – சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் கைது செய்யப்படுவர்

சிவனொளிபாதமலை பெயர் பலகை சேதம் – சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் கைது செய்யப்படுவர்

by admin


சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் .மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று (20.03.2019 ) தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டதனையடுத்து மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்று நிலi8மயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சம்பவத்துடன் தொடா்புடையவா்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்தமையால் அங்கு மீண்டும் பதற்ற நிலை உருவாகியிருந்தது.  இதனைத் தொடர்ந்து அட்டன் காவல்துறை மா அதிபர், மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லத்தண்ணி காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் இணைந்து பொது கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தில், இவ்வாறு தவறான விடயத்தில் ஈடுபட்டோரை சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் கைது செய்யவுள்ளதாக அறிவித்தனர். அத்துடன் சிவனொலிபாதமலையில் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக சிவனொளிபாதமலை என்றிருந்த பெயர் சிறிபாத என்று மாற்றப்பட்டது எனினும் மஸ்கெலியா பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைய மீண்டும் சிவனொளிபாதமலை என எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More