Home உலகம் டிரம்ப் குற்றமற்றவர் என, முல்லரின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை…

டிரம்ப் குற்றமற்றவர் என, முல்லரின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை…

by admin

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என அதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரி ரொபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லர் விசாரணை அறிக்கையின் முக்கிய விடயங்களை அந்நாட்டு சட்டமாஅதிபர் வில்லியம் பார் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து தனது ருவிட்டர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூட்டு சதியும் இல்லை, நீதிக்கு எவ்வித தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

முல்லரின் விசாரணையை அடிக்கடி பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்து வந்த டிரம்ப், இதுபோன்ற விசயங்களை நாடு கடந்து செல்ல வேண்டிய அவமானகரமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பின்புலத்தில் ரஸ்யா உள்ளதா என்பது தொடர்பில் கடந்த இரண்டு வருடங்களாக ரொபர்ட் முல்லர் பல கட்ட விசாரணை நடத்தி வந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக டிரம்பின் பல நெருங்கிய முன்னாள் உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் ட்ரம்ப் குற்ற செயலில் ஈடுபட்டார் என குறிப்பிடப்படாத அதேவேளை, அவர் குற்றமற்றவர் எனவும் குறிப்பிடப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் முல்லர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More