Home இலங்கை மனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இனமுரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது

மனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இனமுரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது

by admin

மனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் இண்ரர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாதறு தெரிவித்துள்ளார்.

நாம் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாலும், சட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர் தனி நபர் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் மாற்றம் வரவேண்டும் எனவும் அவ்வாறு மனப்பாங்கில் மாற்றம் வராத வரையில் எதனையும் மாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தகால அனுபவங்களை வைத்து நோக்கும் போது இனி திகன சம்பவங்களோ அல்லது வடகிழக்கில் யுத்தமோ ஏற்படக்கூடாது என சகலரும் ஏற்றுக் கொண்டாலும் எமது மன நிலையைப் பொறுத்தே அது ஒரு தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை நிரந்தரமாக ஏற்படுத்த முயற்சிப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழு , காவல்துறையினர் , சட்டம், நீதிமன்றம் என்பவற்றினை சரியான முறையில் அணுகி பயன் பெற்று ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More