Home இலங்கை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் மக்களின் குரலை அடக்கும் :

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் மக்களின் குரலை அடக்கும் :

by admin

பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள், சிவில் உரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே புதிய அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக வியத்மக அமைப்பின் உறுப்பினரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பீடாதிபதியும்  சிரேஷ்ட சட்டத்தரணியுமான ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக உருவாக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கும் நோக்கத்தைக் கொண்டது அல்ல எனவும் மாறாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள், சிவில் உரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கத்தை கொண்டது எனவும்ம் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்ப இவ்வாறு ஒரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தயாரித்து, எழுந்துவரும் மக்கள் குரலை அடக்குவதே அரசாங்கத்தின் தேவையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More