Home இலங்கை கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களையும் மகிந்த எங்களுக்கு காண்பித்தார் :

கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களையும் மகிந்த எங்களுக்கு காண்பித்தார் :

by admin


இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலிப் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் காணப்பட்டதாகவும் அவர் அதனை தங்களுக்குக் காண்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2011 மற்றும் 2012 ஆண்டு காலப்பகுதியில் மகிந்த, பசில் ராஜபக்ஸக்களுடன் பலமுறை சந்திப்புகள் இடம்பெற்றதாகவும் இதன்போது சிறையில் அடைக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் முன்னாள் போராளிகளின் விபரங்கள் அடங்கிய, ஏழு ஆவணங்களைக் காண்பித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அவர்களை , வவுனியா முகாமுக்குச் சென்று பார்வையிடலாம் எனத் தெரிவித்திருந்தனர் எனவும் எனினும் தமது பிரதிநிதிகள் அங்கு சென்றபோது, முகாமுக்குள் இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளர்h.
பாராளுமன்றில் நேற்றையதினம் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது போராளிகள், அவர்களின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர், இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் காணப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகையதொரு நிலையில் காணாமலாக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More