Home இலங்கை வடக்கு ஆளுநர் யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் !

வடக்கு ஆளுநர் யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் !

by admin

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ் ஆயர் இல்லத்தில் இன்று முற்பகல் சந்தித்தார்.

யாழ் மறைமாவட்ட மற்றும் வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க சமயத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , மத ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு தீர்வுக்கு கொண்டுவரமுடியும் என்பது தொடர்பாக இருவருக்குமிடையிலான இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட எஞ்சியுள்ள மக்களின் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு யாழ் மறைமாவட்ட ஆயர், ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது வடமாகாண பௌத்த மாநாட்டிற்கு தன்னுடைய ஆசியை வழங்கியதுடன் ஆளுநர் தமது பணிகளை திறம்படமேற்கொண்டுசெல்வதாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஆளுநருக்கு ஆசி வழங்கியதாகவும் வடக்கு ஆநுளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More