Home உலகம் பங்களாதேசில் ஏற்பட்ட தீவிபத்தில் இலங்கையர் உட்பட 19 பேர் பலி

பங்களாதேசில் ஏற்பட்ட தீவிபத்தில் இலங்கையர் உட்பட 19 பேர் பலி

by admin


பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  டாக்காவின் பானானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடி கட்டடத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட இந்த தீயானது 8 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து 11 ஆவது மாடி வரையில் சென்றுள்ளதுடன் கட்டடத்தின் அருகிலிருந்த இரண்டு கட்டடங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ விபத்தின் போது உயிர்தப்பிக்க கட்டடத்தில் இருந்து குதித்தவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இதனையடுத்து தீயணைப்பு படைகள், இராணுவம், விமானப்படை ஒன்றாக இணைந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவாகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

அத்துடன் இந்த விபத்தில் சிக்குண்ட 73 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More